Thursday 20 March 2014

உடையார் வேளாளர் வரலாறு

மாவீரன் சாலிவாகனன்
குலாலர் வரலாறு
சாதவாகனப் பேரரசின்
எல்லைகளும் (தொடர்க் கோடு)
கைப்பற்றிய பகுதிகளும் (புள்ளிக்
கோடு).
ஆட்சி ம
ொழிகள்
சமஸ்கிருதம்
தமிழ் தெலுங்கு
தலைநகர
ங்கள்
பைத்தான் , ஜுன்னார்,
தரணிக்கொட்டா/
அமராவதி
அரசு
முறை முடியாட்சி
குலம் குலாலர்
பின்வந்த
து
இஷ்வாகுகள் , கடம்பர்,
மேற்குச் சத்திரப்புகள் .
குலாலர் - வேளார்-மாவீரன்
சாலியவாகனன் குலாலர் வரலாற்று

Saturday 15 March 2014

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர்

 
 



அருள்மிகு வேற்கண்ணிநாயகி உடனுறை தடுத்தாட்கொண்டநாதர்

மரம்: மூங்கில்
குளம்: பெண்ணையாறு

பதிகம்: பித்தாபிறை -7 -1 சுந்தரர்

முகவரி: திருவெண்ணெய்நல்லூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், 607203
தொபே. 04153 234548

இவ்வூரிலுள்ள கோயிலுக்குத் திருவருட்டுறை என்று பெயர். விழுப்புரத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் இருப்புப்பாதையில் திருவெண்ணெய்நல்லூர் தொடர் வண்டி நிலையத்துக்கு ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது.

சுந்தரமூர்த்தி நாயனார், புத்தூர் சடங்கவியாருடைய மகளாரைத் திருமணஞ் செய்தருளும் போது, இறைவர், முன் கயிலாயத்தில் அருளியபடி வயது முதிர்ந்த அந்தணராய்த் தோன்றித் தடுத்தாட்கொண்டருளிய இடம். அப்புத்தூர் இது பொழுது மணம் தவிர்ந்தபுத்தூர் என்று வழங்கப்படுகின்றது. சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் எழுந்தருளியிருந்த தலமும் இது. இம் மெய்கண்ட தேவருக்கு அருள் செய்த மூர்த்தி பொல்லாப் பிள்ளையார் ஆவர். இறைவர்: தடுத்தாட்கொண்டநாதர், இறைவி: வேற்கண்ணிநாயகி. மங்களாம்பிகை. தீர்த்தம்: பெண்ணையாறு.



கல்வெட்டு:


( A.R.E. 1902 - No. 309 - 319; A.R.E. 1921 -420 - 483, S.I.I.Vol. VII No. 938 - 948; S.I.I.Vol.XII The Pallavas.)

திருவெண்ணெய் நல்லூர்த் தடுத்தாட் கொண்ட தேவரது திருக்கோயிலில், சோழமன்னர்களில் முதலாம் இராசராச உடையார், கோப்பரகேசரி பன்மரான உடையார் இராசேந்திரதேவன், இரண்டாங் குலோத்துங்கஉடையார், இரண்டாம் இராசாதிராசஉடையார், மூன்றாங் குலோத்துங்கஉடையார், மூன்றாம் இராசராசன் உடையார், மூன்றாம் இராசேந்திரஉடையார் இவர்கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியதேவன், விக்கிரம பாண்டிய உடையான் இவர்கள் காலங்களிலும்; பல்லவமன்னர்களில் முதலாம் கோப்பெருஞ் சிங்கன், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் இவர்கள் காலங்களிலும், விசயநகர வேந்தர்களில் மகாமண்டலேஸ்வரன் வீரபூபதி உடையார், விஜயமகாராயர், விரூபாட்சுமகாராயஉடையார், குமாரமல்லி கார்ச்சுனராயஉடையார், கிருஷ்ணதேவராய உடையார் இவர்கள் காலங்களிலும், சாளுவமன்னர்களில் மகாமண்டலேஸ்வரன் நரசிங்கதேவமகாராயர் காலங்களிலும், காலத்திலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இறைவர்: இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர், முதலாம் இராசராச உடையார் கல்வெட்டில், திருவெண்ணெய்நல்லூர்த் திருவருட்டுறை ஆள்வார் என்றும், இரண்டாம் இராசாதிராச உடையார் முதலானோர் கல்வெட்டுக்களில் திருவெண்ணெய் நல்லூர் உடையார் ஆட்கொண்டதேவர் என்றும், தடுத்தாட்கொண்ட தேவர் என்றும் அழைக்கப் பெறுகின்றனர்.

குறிக்கப்படும் திருமேனிகளுள் சில: திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவரின் 32 ஆம் ஆண்டுக் கல்வெட்டில் பள்ளியறை நாச்சியார், வாணலிங்க தேவர் இவர்களும், திரிபுவனச் சக்கரவர்த்தி உடையார் இராஜராஜ தேவரின் கல்வெட்டில் க்ஷேத்திரபாலப் பிள்ளையாரும், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கஉடையார் கல்வெட்டில் திருக்காமக்கோட்டம் மேலைமூலையில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரும் குறிக்கப்படுகின்றனர். இப்பிள்ளையாரின் முழுப்பெயரும் கிடைக்கப்பெறவில்லை. எழுத்துகள் சிதைந்து விட்டபடியால் `தில்லைவ ....... நன் பிள்ளையார்` என்பது மாத்திரம் கிடைக்கின்றது.

எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனி: `பூமருவிய திசைமுகத் தோன் படைத்த பெரும்புவி விளங்க` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய மூன்றாங் குலோத்துங்கசோழ உடையார் காலத்தில், கூடல் ஏழிசை மோகன் மணவாளப்பெருமாள் வாள்நிலை கண்டானான காடவராயன் ஒரு திருமேனியை இக்கோயிலில் எழுந்தருளி வித்துள்ளான். கல்வெட்டில் அப்பெயர் சிதைந்து விட்டது.

சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பற்றிய செய்திகள்: இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆளுடைய நம்பி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர். அவர் நாச்சி மாரோடு எழுந்தருளியிருக்கும் இடம் ஆட்கொண்ட தேவர் தீர்த்தக் குளமான தேவனார் கேணியின் கீழ்க்கரை ஆகும். இச்செய்திகள் `பூமன்னுபதுமம்பூத்த ஏழுலகும் தாம் முன் செய் தவத்தால் பருதிவழித்தோன்றி` என்று தொடங்கப்பெறும் மெய்க்கீர்த்தியையுடைய உடையார் இரண்டாங் குலோத்துங்க சோழதேவரின் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டு ஏற்பட்ட காலம் கி.பி. 1148 மே மாதம் ஒன்பதாம் தேதி ஆகும். ஒரு தெருவுக்கு ஆலால சுந்தரப்பெருந்தெரு என்றும், ஒரு சுரபி மன்றாடிக்கு நம்பி ஆரூரன் கோன் என்றும், ஒரு ஊர்க்கு, தடுத்தாட்கொண்நல்லூர் என்றும் பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவ்வூரில் வழக்குவென்ற திருவம் பலம் என்னும் பெயரால் கருங்கல் கட்டிடம் ஒன்று இருந்ததை, திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கசோழதேவரின் 29 ஆம் ஆண்டுக் கல்வெட்டு அறிவிக்கின்றது. இந்த அம்பலம் உள்ள இடம் வேறு ஒருவர்க்கு உரியதாய் இருந்தது. அதற்குப்பதில் கோயிலுக்குரிய ஒரு இடத்தை அவர்க்குக் கொடுத்து இந்த இடம் கொள்ளப்பட்டது என்பதையும் அக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.

திருச்சின்னத்துக்குப் `பிச்சன் என்று பாடச்சொன்னான் திருச்சின்னம்` என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இறைவர், சுந்தர மூர்த்தி சுவாமியை நோக்கி `நமக்கும் அன்பின்பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற் றமிழ் பாடுக` என்றார். அதற்குச் சுந்தரமூர்த்தி சுவாமிகள், `கோதிலா அமுதே! இன்று உன் குணப்பெருங்கடலை நாயேன் யாதினை அறிந்து என் சொல்லிப்பாடுகேன்` என்றார். அதற்கு இறைவர் `முன்பு என்னைப் பித்தனென்றே மொழிந்தனை, ஆதலால் என் பெயர் பித்த னென்றே பாடுவாய்` என்றார். அப்பொழுது சுந்தரமூத்தி சுவாமிகள் `பித்தாபிறைசூடீ` எனப் பெரிதாந் திருப்பதிகம் பாடினார் எனச் சேக்கிழார் பெருந்தகையார் கூறிய வரலாற்றை உறுதிப் படுத்துகின்றது `பிச்சன் என்று பாடச்சொன்னான் திருச்சின்னம்` என்ற கல்வெட்டுத் தொடர். (பித்தன் - பிச்சன், தகரத்துக்குச் சகரம் போலி)

அக்கல்வெட்டு பின்வருமாறு: `ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவநச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு உஎ (27) ஆவது மேஷ நாயற்று பூர்வபக்ஷத்து சதுர்த்தஸியும் புதன்கிழமையும் பெற்ற அத்தத்து நாள் திருவெண்ணைநல்லூர் உடையார் ஆட்கொண்ட தேவர்க்கு மத்யஸ்தன் செஞ்சி உடையான் உதையன் கைலாய முடையான் இட்ட பிச்சன் என்று பாடச் சொன்னான் திருச்சின்னம் இரண்டினால் வெள்ளி எடை ஐம்பத்து ஐங்கழஞ்சும், ஆவுடைய நாயனார் சீபாதத்து சாத்தின கொடியுடன் கோத்தகால் காறையுடன் ஒன்பது மாற்றில் பொன் இரு கழஞ்சு. இது பன்மாஹேஸ்வர ரகை்ஷ` (S.I.I. Vol XII The Pallavas No. 231.)

குறிப்பு: இக் கல்வெட்டு இரண்டாம் கோப்பெருஞ்சிங்க உடையார் காலத்தில் பொறிக்கப்பட்டது. இக் கல்வெட்டு ஏற்பட்ட காலம் கி.பி. 1268 மார்ச்சு 28 ஆம் தேதியாகும். 

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விடப்பட்ட நில நிவந்தம்.
நாச்சிமாரோடு பூசை கொண்டருளுகிற ஆளுடைய நம்பிக்கு அமுதுபடி உள்ளிட்ட நிவந்தங்களுக்கு உடலாக (மூலதனமாக) திரு வெண்ணெய்நல்லூர்ச் சபையார், திருவெண்ணெய்நல்லூர் நாட்டுப் பட்டர்கள், ஆதனூர் எல்லையில் அதிராதீர காடகையாஜியார், ஆட் கொண்ட தேவற்குச் சட்டிவிளாகமாகக்கொண்டு விட்ட நிலத்துக்கு வடக்கே, அரைவேலி நிலத்தைக்கொடுத்துள்ளனர். இது நிகழ்ந்தது இரண்டாம் குலோத்துங்கசோழ தேவரின் காலமாகும் (கி.பி.1148). இதே ஆண்டில் களத்தூர் சிறிய நம்பி சகஸ்ரன். ஆளுடையநம்பிக்கு அடைக்காய் அமுது` இலையமுது இவைகளுக்கு, திருவெண்ணெய் நல்லூரில் ஸ்ரீவானவன் மாதேவிவதிக்கு மேற்கு, மும்முடிச்சோழ வாய்க்காலுக்கு வடக்கு இதற்குட்பட்ட தோட்டநிலத்தைக் கொடுத்துள்ளான். ஆட்கொண்டதேவர் கோயிலிலே மாடாபத்தியஞ்செய்த உடையார் அகமுடையாள் பொன்னாண்டாள், ஆளுடைய நம்பிக்கு அமுது படிக்கும், திருக்கைகொட்டிப்புறத்துக்கும் ஆக, திருவெண்ணெய் நல்லூரில் வானவன்வதிக்கு மேற்கு, மும்முடிச்சோழ வாய்க்காலுக்கு வடக்கு நிலம் ஒன்றே அரைமா அரைக்காணிக் கீழரையைவிற்று, விற்ற காசை ஸ்ரீ பண்டாரத்திலே ஒடுக்கினாள். (மாடாபத்தியம் கோயில் விசாரணை. திருக்கைகொட்டிப்புறம் - திருமுறை ஒதுதற்குரிய கோயில் மண்டபத்துக்கு விட்டநிவந்தம். புறம் - நிவந்தம்.)

திருவருட்டுறை உடைய மகாதேவர்க்கு அளிக்கப்பட்ட நிவந்தம்: அருட்டுறை உடைய மகாதேவர் கோயில்  அகமுடையார்மகன் திருமலை அழகியானான வீரகள், வீரப் பல்லவரைய உடையான் அருட்டுறை உடைய மகாதேவர்க்கு, தூபமணி, தூபம், துடர், திருவாராத்தித்தட்டம் இவைகளைக் கொடுத்துள்ளான். இவனுக்கு ஏமப்பேறூரில் பெண்ணையாற்றுக்குத் தெற்கே புன்செய் நிலம் 3500 குழியும் இவன் தம்பிக்குத் திருவெண்ணெய்நல்லூரில் 1250 குழியும் ஆக 4750 குழிகள் அல்லது முப்பதுமா வரை நிலங்கள் இருந்தன. இத்திருமலை அழகியான் இறக்கும் பொழுது தன்னுடைய இந்தநிலத்தை உடையார் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் முதலிகளில் இராசராச தேனம்மையனுக்குத் திருக்கை வழக்கமாக வழங்கினான். அந்நிலத்தை இந்த முதலி, கோயில் மண்டபத்தில் பதினாலும், திருக்காமக்கோட்டத்தில் மூன்றும், திருநடைமாளிகையில் மேல் எல்லையில் அழகிய நாயனார் இருக்கும் இடத்தில் ஒன்றுமாக நாடோறும் பதினெட்டு, சந்தி விளக்குகள் எரிப்பதற்குக் கொடுத்துள்ளான்.

பொதுச் செய்திகள்: இவ்வூரில் இராஜராஜப்பேரேரி ஒன்று உள்ளதை, கோப்பரகேசரி இராசேந்திரசோழதேவரின் ஆறாம் ஆண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு குறிப்பிடுகின்றது. எனவே இந்த ஏரி மிகப் பழமையானதாகும்.

ஆட்கொண்டதேவர் கோயிலுக்குத் தென்பாலுள்ள குளம் கி.பி.1396 இல் விரூபாக்ஷுவின் அமைச்சர் நஞ்சண்ணாவின் தமையனார் விருப்பண்ணாவால் பழுதுபார்க்கப்பட்டது, 

விசயநகர வேந்தராகிய கிருஷ்ணதேவரா உடையார் தம்பேரால் தடுத்தாட்கொண்ட தம்பிரானார் திருக்கோயிலிலும், வைகுந்தப்பெருமாள் திருக்கோயிலிலும், கிருஷ்ணதேவராய உடையார் சந்தி நடத்துவதற்குச் சர்வமான்ய மாக நன்செய் நிலம் 35 மாவும், புன்செய் நிலம் 20 மாவும் கொடுத்துள்ளார்.

இக்கோயிலிலுள்ள கோபுரத்து வாசலின் முகப்பு குலோத்துங்க சோழதேவரின் மூன்றாம் ஆண்டில், கூடல் மோகன் ஆளப்பிறந்தான் நாராயணனாகிய காடவராயனால் கட்டப் பட்டதாகும். இக்கோபுரத்தில் திருவெண்ணெய்நல்லூர் இறைவரின் புகழைப்பற்றி ஐந்து தமிழ்ப் பாடல்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோபுரத்தின் உள்சுவரில் சகம் 1108 அதாவது கி.பி. 1186 இல் சில பாடல்கள் அரசுநாராயணன் ஆளப்பிறந்தான் வீரசேகரனான காடவராயர் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளன. அவை காடவராயர் குடும்பத்தைப் பற்றிய செய்திகளாகும். இக் கோயிலில் ஆட்கொண்ட தேவர் பாலாடியருள பசுக்கள் விடப்பட்டிருந்தன. பசுக்களை விட்டவர் ரிஷபம் ஒன்றையும் கொடுத்துள்ளனர். அப்பசுக்கள் சுரபி மன்றாடிகளிடம் விடப்பட்டிருந்தன. அவர்கள் அப்பாலை அருமொழிதேவன் நாழியால் தவறாது அளந்து வந்தனர், 
[சுரபி மன்றாடிகள் - பசுக்களைப் பாதுகாக்கும் இடையர்.]

இரண்டாம் கோப்பெருஞ்சிங்க உடையார், ஆனைக்கு அரசு வழங்கும் பெருமாள்தோப்பு என்னும் தோப்பைத் திருக்கோயிலுக்கு விட்டிருந்தான். அது 12 மா நிலப்பரப்புள்ளது. மேலும் இவன் சீழகம் பட்டில் கோப்பெருஞ்சிங்கன் தோப்பு என்னும் பெயருள்ள தோப்பு ஒன்றையும் விட்டிருந்தான். சோழமண்டலத்தில் விக்கிரம சோழவள நாட்டில் திருப்பழனம், வடகுரங்காடுதுறை முதலான ஊர்கள் விறைக் கூற்றத்தைச் சேர்ந்தன. விறைக்கூற்றம் என்பது விறை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டது.

அந்த விறை என்னும் ஊர்க்கு அகளங்கபுரம் என்னும் வேறு பெயர் உண்டென்பதை இக் கோயில் கல்வெட்டு உணர்த்துகின்றது. அவ்வூரில் உள்ள ஒருவன் தடுத்தாட்கொண்ட தேவர்க்கு விளக்குக்கும் விழாவிற்கும் 120 காசு கொடுத்துள்ளான்.

பட்டுடையான்: `இந்நாளில் இப்படி செலுத்துவேனாய் இப் பொன்கொண்டேன், இத் தளிப்பட்டுடையான் ஈஸ்வரக்காணி வாம தேவன் திருவெண்காடனேன்`(S.I.I. Vol. III. Part III No. 94. p. 227. ) என்னும் கல்வெட்டுப்பகுதியில் பட்டுடையான் என்ற தொடர் வந்துள்ளது, இந்த ஆட்கொண்ட தேவர் கோயிலில் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் கல்வெட்டில்கண்ட ``ஆட்கொண்டதேவர்  சைவா சாரியஞ் செய்து வருகிற பட்டுடையார்களைத் தவிர``, என்னும் (S.I. Vol. VII No.944.)கல்வெட்டுப்பகுதியால் பட்டுடையார் என்பது சைவா சாரியம் மட்டும் செய்வாரைக் குறிக்கும் என்பது தெற்றெனப் பெறப்படுகின்றது. எனவே பட்டுடையார் என்பது கோயிற்பூசை செய்வாரைக் குறிக்காது.

``இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ளடு`` முதலாம் இராசராசன் காலத்தில் இவ்வூர், திருவெண்ணெய்நல்லூர் என்றும், கோப்பரகேசரிபன்மரான உடையார் இராஜேந்திரதேவர் கல்வெட்டில் இராஜேந்திரசோழ வளநாட்டுத் திருமுனைப்பாடித் திருவெண்ணெய் நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய் நல்லூர் என்றும், இரண்டாம் இராசாதிராச உடையார் காலம்முதல் பின்னுள்ளோர்காலம்வரை இராசராச வளநாட்டுத் திருமுனைப்பாடி திருவெண்ணெய்நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய் நல்லூர் என்றும் இக்கோயில் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ளது.

Tuesday 19 November 2013

உடையார் வள்ளால மகாராஜா கட்டிய திருவண்ணாமலை சிவன் கோயிலிற்கு உடையார் கிருஷ்ணதேவராயரின் பங்கு

உடையார் வள்ளால மகாராஜா கட்டிய கோயிலைப் பற்றியும்

அருணாச்சலேஸ்வரரை பற்றியும்
திருவண்ணாமலையை பற்றியும்
அருணகிரிநாதர் அவர்கள் எழுத்துகள்
முலம் சிறப்பாக உரைத்துள்ளார்.

இப்படைப்புகளை வாசித்த சோழ உடையார் பரம்பரை
மன்னர்கள் மிகவும்
பூரிப்படைந்து இக்கோயிலுக்காக பல
உதவிகளை செய்துள்ளனர்.

மேலும்
கடவுள் அருணாச்சலேஸ்வரர்
மகிமை மீது மிகுந்த
நம்பிக்கை அடைந்துள்ளனர்.

சோழ உடையார் பரம்பரை
மன்னர்கள் பல கோபுரங்கள், மண்டபங்கள்,
கோயிலை சேர்ந்த கட்டிடங்கள்
கட்டிகொடுத்து கடந்த ஆயிரம் காலமாக
கோயில் முன்னேற்றம் அடைய
உதவியுள்ளனர்.

மேலும் விஜய நகரை ஆண்ட மன்னர்
கிருஷ்ணதேவராயர் உடையார்
திருவண்ணாமலை கோயில்
வளர்ச்சிக்காக கோபுரங்கள், மண்டபங்கள்
என பல
கட்டிடங்களை கட்டிக்கொடுத்து உதவியுள்ளார்.

இதில் 217 அடி கொண்ட ராஜகோபுரம்
மன்னர் கிருஷ்ணதேவராயர் உடையார் உதவியால்
உருவாக்கப்பட்டது.

இவர்
அண்ணாமலையாரின் தீவிர பக்தராக
விளங்கினார்.

இக்கோபுரமானது இந்தியாவின்
உயரத்தில்
இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் இக்கோயில் சிவன்
பார்வதிக்காக இந்தியாவில் கட்டப்பட்ட
மிக பெரிய கோயில்
என்று வரலாறு கூறுகிறது.

மற்றும்
ஒரு சிவன் பக்தரான
பல்லாலா இக்கோயிலுக்காக பல
கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார்.
இவர்
செய்த உதவியை சிவனடியார்
பாராட்டும் விதத்தில்
பல்லாலா இறைவனடி சேர்ந்த
பின்பு சிவபெருமானே வந்து இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால்
அவரே இறுதி சடங்குகள் செய்தார் என
வரலாறு கூறுகிறது.

சிவனடியார் இங்கு அக்னி வடிவத்தில்
உருவான
மற்றொரு வரலாறு சுவாரசியமான
புராணம். ஒரு தருணத்தில்
பிரம்மா மற்றும்
விஷ்ணுவிற்கு வாக்குவாதம்
ஈற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில்,
சிவன்
இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க
அக்னி வடிவத்தில்
தோற்றமளித்து விஷ்ணுவையும்,
பிரம்மாவையும் சிவனுடைய கால்கள்
மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால்
விடுத்தார்.

இந்த சவாலை ஏற்ற
பிரம்மா மற்றும்
விஷ்ணு தோல்வியடைந்தனர். இந்த
போட்டியில் பிரம்மா ஜெயிக்க
சிவனிடம் பொய் சொல்லிவிட்டார்.
இதனால் கோபமடைந்த சிவன்
பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார். இந்த
சாபத்தினால்
பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த
இடத்திலும் கோயில் இல்லை. இதனால்
பிரம்மாவை யாரும் எந்த
கோயிலிலும் சென்று வணங்க
முடியாத நிலை உள்ளது.

இன்று திருவண்ணாமலையில்
சிவனடியார் அக்னியாக
வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய
காரணமாக உள்ளது. ஆதலால்
இது ஒரு பஞ்சபூத ஸ்தலமாக
தமிழ்நாட்டில் திகழ்கிறது.

Monday 18 November 2013

உடையார் வழிபட்ட சாமுண்டீஸ்வரி

சூரிலிருந்து 13வது கி.மீ.
தொலைவில்
சாமுண்டி குன்று உள்ளது.

சாமுண்டீஸ்வரி குடிகொண்டுள்ள
இடம் இது.

மலையின் மீது கோயில்
அமைந்துள்ளதால் 1000 படிகள் ஏறிச்
சென்று தரிசிக்க வேண்டும்.

இந்த மலையின் உயரம் 3489 அடி.
வழியில் பாதி தொலைவில் அழகிய
நந்தியைக் காணலாம்.

கருங்கல்லால்
ஆன இது எண்ணெய் மெழுகியும், பல
அபிஷேக தீர்த்தங்கள் ஊற்றியும்
இன்று முழு  கறுப்பாக
மாறிவிட்டது.

16 அடி உயரம் கொண்ட
கம்பீர நந்தியை 1659ஆம்
ஆண்டு மைசூர் மகாராஜ கொட்ட
தேவராஜ உடையார்
பிரதிஷ்டை செய்தார்.

ஸ்கந்த புராணம்

உட்பட சில
புராணங்கள் இந்த இடத்தை

"திரிமுட
க்ஷேத்திரம்'

என வர்ணிக்கின்றன.

சுற்றி எட்டு மலைகள் உள்ளன.

மேற்குப் புறத்தில் உள்ள
மலை சாமுண்டி.

இந்தப் பகுதியில் மிகப் பழைய
மகாபலேஸ்வரர் சிவன் கோயில்
உள்ளது.
இதனால் இந்த
மலையை மகாபலாத்ரி எனவும்
அழைக்கின்றர்.

தேவி சாமுண்டீஸ்வரி நினைவாகவே இது "சாமுண்டி மலை'
என அழைக்கப்படுகிறது.

தசரா நேரத்தில் அரண்மனை உட்பட
மைசூர் முழுவதும் அலங்கார
விளக்குகள் போட்டு ஜொலிக்கும்.

அதனை  இந்த மலையின்
மீதிருந்து பார்த்தோமானால்,
"ஆஹா... தேவர் உலகமோ' என வியக்க
வைக்கும்.

சாமுண்டி ஆதிசக்தியாக
வணங்கப்படுகிறார். அவள் பிரம்மா,
விஷ்ணு, சிவன் ஆகிய
மூன்றுமே ஒன்றான  "மகாபிரம்மம்'
"மகாசக்தி' என மக்கள் நம்புகின்றனர்.

சாமுண்டி கோயிலுக்கு இடது புறம்
மகிஷாசுரனை காணலாம். 3.5 மீட்டர்
உயரத்தில், வலது கையில்
கத்தியுடனும், இடது கையில்
பாம்புடனும் ஆக்ரோஷமாய்
இருக்கிறான்.

சாமுண்டி கோயில் 1000
ஆண்டுகளுக்கும் மேல்
பழைமையானது.

முதலில் சின்ன
கோயிலாக இருந்து 1399ல் மைசூர்
உடையார் ஆட்சி வந்ததும்,
பெரிதாக்கப்பட்ட கோயில்.

மைசூர் உடையார்
மன்னர்களின்  குலதெய்வம்
சாமுண்டேஸ்வரி.

ஹோய்சாள - விஜயநகர - மைசூர்
மன்னர்களும் இந்தக்
கோயிலுக்கு ஏராளமான
திருப்பணிகளைச் செய்துள்ளனர்.

கோயிலின் ஏழு அடுக்கு கோபுரம்
நம்மை கம்பீரமாய் வரவேற்கிறது.

உடையார்

தென் இந்தியாவின் முக்கிய
அரசுகளில் மைசூர் அரசும் ஒன்று.

மைசூர் அரசர்
மதுரையை தாக்கி மூக்கறுப்பு போர்
நடந்தது வரலாற்றில் முக்கியமானது.

அதில் இருவரும் ஒரே சாதியாக
இருந்தாலும் போர் நடந்தது என்றும்
.
கன்னிவாடி பாளையக்காரர்
செப்பேட்டில் மைசூர்
அரசர்களை நோக்கி எழுதப்பட்ட
செப்பேட்டில் " எருமை நாட்டை ஆண்ட ஸ்ரீ ஸ்ரீ
ஸ்ரீ
மகாராஜா தொட்டப்பா ராயா சேனாபதி சிக்க
உடையார் " என்று உள்ளது.

கிருஷ்ணதேவராய உடையார்

இந்தியாவின் ஆக்ராவில்
தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்
இடம், மைசூர் அம்பாவிலாஸ்
அரண்மனைதான்.

மைசூர் அரண்மனை கட்டப்பட்டு இந்த
ஆண்டுடன் நூறாண்டுகள்
நிறைவடைகிறது.

மைசூர்
யதுவம்ச மன்னர்களின் வரலாற்றைக்
கூறும் மைசூர் அரண்மனை 1897-ம்
ஆண்டு அக்டோபர் மாதம் கட்ட
துவங்கப்பட்டது.

பதினைந்து ஆண்டு கால மனித
உழைப்பிற்குப் பின்னர் 1912-ம் ஆம்
ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
இதற்கான செலவு 41 லட்சத்து 47
ஆயிரத்து 913 ரூபாய்.

உடையார் மன்னர்களின்
புகழுக்கு எடுத்துக்காட்டாக
விளங்கும் இந்த
அரண்மனையை

மேற்பார்வை
பார்த்து கட்டுவதற்கு
உறுதுணையாக இருந்தவர்
அரசி கெம்ப நஞ்சம்ணி வாணிவிலாச
சன்னிதானா ஆவர்.

1399-ஆம் ஆண்டில்
யதுவம்சத்தை சேர்ந்த
யதுராயா மன்னரால் மைசூர்
ராஜ்யம் உருவாயிற்று.

உடையார்
மன்னர்கள் வழிவந்த சாமராஜ
உடையாரின் மகள் தேவராஜ
அம்மணி, யதுராயா மன்னரைத்
திருமணம் செய்து மைசூரில்
குடிபுகுந்தார்.

யதுராயா மன்னர்கள்
காலத்திலேயே நிறுவப்பட்ட
மைசூர் அரண்மனை,
ரணதீரா கண்டீரவா நாகராஜ உடையார்
ஆட்சிக் காலத்தில் மின்னலால்
தாக்கப்பட்டு சிதிலமடைந்ததால்
புதிய அரண்மனை கட்டப்பட்டது.